வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது

73பார்த்தது
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது
தேனி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மாவர் சங்கம் கல்லூரிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று(ஏப்.29) இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் என்ற இளைஞர் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்திய போது, தகாத வார்த்தைகள் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்காக பெறப்பட்ட புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி