மோடி எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்: ஸ்டாலின் கேள்வி

71பார்த்தது
மோடி எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்: ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டுக்கென 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாமல், அறிவிக்கப்பட்ட ஒரே சிறப்புத்திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டித் தராமல், எந்த முகத்துடன் பிரதமர் மோடி வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டுக்கு வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தேர்தல் சீசனில் மட்டும் வந்துபோக இது என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா.. இத்தகைய போலிகள் வீழ்ந்து, தமிழ்நாட்டை உண்மையாக மதிக்கும் பிரதமர் டெல்லியில் அமர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி