ஓட்டுனரின் கையை வெட்டிய பெண்

607பார்த்தது
ஓட்டுனரின் கையை வெட்டிய பெண்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஈஸ்வரன் கோயில் தெரு பகுதியில் ராகுல் (24) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தினமும் இரவில் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்துவது வழக்கம். வழக்கம்போல காரை நிறுத்திவிட்டு காலை எடுக்க சென்றபோது, சீனிவாசன் என்பவரது இருசக்கர வாகனம் கார் முன்னே நின்றுள்ளது. அதை எடுக்குமாறு சீனிவாசன் மனைவி சத்யாவிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது அங்கு வந்த சத்யாவின் அம்மா தனலட்சுமி, ராகுலை கட்டையால் தாக்கியத்துடன் அரிவாள்மனையை எடுத்து கையில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி