“கமலஹாசனுக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும்” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு மக்கள் நீதி மையம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. ம.நீ.ம கட்சி நிர்வாகி அருணாச்சலம் தனது ‘X’ தளத்தில், “பல கோடி இதயங்களில் காந்தியின் பேரனாக வாழ்பவர் கமலஹாசன். எங்கள் தலைவர் உங்களை மன்னித்தாலும், எட்டு கோடி தமிழர்களும், 140 கோடி இந்தியர்களும் நீங்கள் பேசிய பண்பாடற்ற வார்த்தைகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். யாகாவாராயினும் நாகாக்க” என பதிவிட்டுள்ளார்.