'தங்கலான்' படத்தை பாராட்டது ஏன்? திருமா விளக்கம்

50பார்த்தது
'தங்கலான்' படத்தை பாராட்டது ஏன்? திருமா விளக்கம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த திருமாவிடம், 'வாழை' படத்தை இயக்கிய மாரி செல்வராஜை மட்டும் பாராட்டியுள்ளீர்கள். 'தங்கலான்' படத்தை இயக்கிய பா.இரஞ்சித்தை மட்டும் ஏன் பாராட்டவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, படத்தை இன்னும் பார்க்கவில்லை என திருமா விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி