கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்பு.. உண்மையா? வதந்தியா?

83பார்த்தது
கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்பு.. உண்மையா? வதந்தியா?
சென்னை எழும்பூர் கிரீம்ஸ் சாலை அருகே உள்ள கூவம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து, காசாகிராண்ட் நிறுவனம் கட்டிடம் கட்டி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், அது தவறாக பரப்பப்படும் வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளியை சிலர் தவறாக பரப்பி வருவதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி