மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? - உதயநிதி கேள்வி

68பார்த்தது
மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? -  உதயநிதி கேள்வி
தென்காசியில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 12) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மக்கள் ஜிஎஸ்டி வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால் அதனைப் பிரித்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் கொடுக்கிறது. இதில், தமிழ்நாட்டை மட்டும் பாஜக அரசு வஞ்சிப்பது ஏன்?. இதனால் பிரதமர் மோடியை இனி ‘மிஸ்டர் 29 பைசா’ என்றே அழைக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி