ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
*விருதுநகரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்- 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் திருமலை தலைமையில்,

ஊராட்சியில் பணிபுரியும் ஆப்ரேட்டர்களுக்கும், தூய்மை காவலர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் சர்வீஸ் தொகை வழங்க வேண்டும், கொரோனா தொற்று காலங்களில் உயிரை பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக பணி செய்த ஊராட்சி பணியாளருக்கு அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை 15 ஆயிரத்தை வழங்கிட வேண்டும், ஊராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை மற்றும் ஒரு மாத ஊதியத் தொகையினையும் வழங்கிட வேண்டும்,


தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதிகளில் இருந்து ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் , ஊராட்சி தொழிலாளர்களுக்கு சம்பளம் வித்தியாசம் இல்லாமல் சம்பளம் பெற்ற மாவட்ட வளர்ச்சி பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி