3 ஆண்டுசாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி தொடங்க உள்ளது

78பார்த்தது
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், “தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன். , இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூலம் மூன்றாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 15. 07. 2024 அன்று தொடங்கப்பட்டு, 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி