புதிய தடுப்பணை கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை

52பார்த்தது
புதிய தடுப்பணை கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே காக்கனாம்பாளையம் ஊராட்சி சிங்கம்பாளையம் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 10 அடி உயரத்திற்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையானது சேதமடைந்தது. இதன் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகள் விவசாயம் செய்யும் அளவும் குறைந்து வருகிறது. ஆகையால், புதிய தடுப்பணை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி