மது போதையில் தள்ளாடி நடந்த பெண்

62பார்த்தது
மது போதையில் தள்ளாடி நடந்த பெண்
சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் பெண் ஒருவர் குடிபோதையில் சாலையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளார். ஒருகட்டத்தில் போதை தலைக்கேறி சாலையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் தெளித்து அப்பெண்ணை எழுப்பி போதையை தெளியவைத்து விசாரித்துள்ளனர். அதில் புழல் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற அந்த பெண், 3 குழந்தைகளையும் தன்னையும் கணவர் விட்டுசென்றதால் மனஉளைச்சலில் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

தொடர்புடைய செய்தி