திருச்சுழி அருகே 6 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் மானச்சாலை ஆகிய பகுதிகளிலிருந்து மானாமதுரை செல்ல வேண்டும் என்றால் இருஞ்சிறை விலக்கு வழியாக சுமார் 12 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் 5 கோடியை 83 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையை இன்று தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் சாலையின் தரம் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தன அரசு தனது வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய பெருந்தலைவர் காளீஸ்வரி சமையவேலு, ஒன்றிய செயலாளர் கண்ணன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி