மருத்துவ கனவை எட்டிப்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

61பார்த்தது
மருத்துவ கனவை எட்டிப்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!
காரைக்குடி அருகே உள்ள கமலை கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் ரவி மற்றும் நாகராஜ் என்ற அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். மாற்றுத்திறனாளியான நாகராஜ், ஆடு மேய்த்துக்கொண்டு கல்வியிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது நீட் தேர்வில் 136 மதிப்பெண் பெற்று மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல் நீட் தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்ற ரவி, 7.5% இடஒதுக்கீடு மூலம் அதே கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி