சிக்னல் கம்பம் முறிந்து சாலையின் நடுவே விழுந்து விபத்து

82பார்த்தது
விருதுநகர் -மதுரை சாலை மற்றும் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை, பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை மற்றும் மெயின் பஜார் செல்லும் நான்கு முனை சந்திப்பு சாலையில் போக்குவரத்து காவல்துறை சார்பாக சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சிக்னல் கம்பம் எவ்வித செயல்பாடு இன்றி காட்சி பொருளாக இருந்தது.

இந்நிலையில் திடீரென போக்குவரத்து சிக்னல் கம்பம் சாலையின் நடுவே முறிந்து விழுந்தது. கம்பம் விழுந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து சிக்னல் கம்பம் முறிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ட்ரை சைக்கிள் சேதமடைந்தது. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் முறிந்து விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றினர். போக்குவரத்து சிக்னல் கம்பம் முறிந்து விழுந்ததால் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் பயன்பாடின்றி இருக்கும் போக்குவரத்து சிக்னல் கம்பங்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி