கனமழை முன்னெச்சரிக்கை... முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

69பார்த்தது
கனமழை முன்னெச்சரிக்கை... முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
கனமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. இதுதொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று(அக்.14) ஆலோசனை நடத்திவருகிறார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.