ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீதிமன்ற ஊழியர் தற்கொலை. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள W. புதுப்பட்டியை சேர்ந்தவர் ராகவன் 36, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்து உள்ளார். மேலும் மன அழுத்தம்
காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்நிலையில் ஏப். 1 நேற்று இரவு தனது வீட்டில் மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் செல் போனை வீட்டில் வைத்து விட்டு அருகிலுள்ள மாதா மலை செல்வதாக சொல்லி சென்றவர், அங்கு விஷ மருந்தை குடித்துள்ளார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கிப்பட்டு மயங்கி கிடந்த மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று போது அவர் உயிரிழந்தார் என மருவத்துவர் தெரிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து
ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.