ஸ்ரீவி: கள்ள காதலனுக்கு கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை....

50பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் கள்ள காதலனுக்கு கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை
தண்டனை.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகம், துரைச்சாமிபுரம் செங்குட்வன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவரின் மகன் பொன்ராஜ், இவரது மனைவி சக்கரைத்தாய் இருவரும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் சக்கரைத்தாய் இதே ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகன் ஜெகநாதன் என்பவருடன் கடந்த சில மாதங்களால் கள்ள தொடர்பில் இருந்து உள்ளார். மேற்படி கள்ள தொடர்பை தெரிந்த கணவர் பொன்ராஜ், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கள்ள காதலன் ஜெகநாதன், பொன்ராஜை கடந்த 9. 8. 2013 ஆம் தேதி கொலை செய்து விட்டார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று 20. 9. 2024 ஆம் தேதி மேற்படி ஜெகநாதனை குற்றவாளி என அறிவித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ3000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறபித்துள்ளார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு உத்தரவு வழங்கியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி