ஸ்ரீவி: தென் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்....

79பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாசபெருமாள்கோயிலில் நான்காவது வார சனிக்கிழமை. மலையில் குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை பல்லாயிரகணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம். தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக்கோவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். இங்கு வருடா, வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 வதுவார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் காணிக்கையாக தானிய பொருள்கள் வழங்குவார்கள். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து, மருத்துவம், குடிநீர்,
கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி