விமானம் மூலம் ஐபோன்கள் கடத்தல்.. சென்னையில் 4 பேர் கைது

80பார்த்தது
விமானம் மூலம் ஐபோன்கள் கடத்தல்.. சென்னையில் 4 பேர் கைது
மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு வந்தது. அதில் பயணித்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேர் ரூ.1.02 கோடி மதிப்புடைய தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள், இ- சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பயணிகள் 4 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி