விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

83பார்த்தது
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (அக்.11) மாலை 5.40 மணிக்கு சார்ஜா புறப்பட்டது. தொழில்நுட்பக்‌ கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்து வந்தது. இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி