விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2025 அன்று காலை 11.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்துகொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனுமூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.