மாநில அளவிலானகூடைப்பந்து போட்டி. ஏராளமான வீரர்கள் பங்கேற்பு..

50பார்த்தது
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக காவல்துறை அணி வெற்றி பெற்றது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் மாநகராட்சி நிர்வாகமும், வாரியர்ஸ் கூடைப்பந்து அகடாமியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து மாநகராட்சி பள்ளி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், சேலம், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைப்பெற்ற இதன் இறுதி போட்டியில் தமிழக காவல்துறை அணியும் திண்டுக்கல் கூடைப்பந்து கழக அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 56-50 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக காவல்துறை அணி திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடித்த தமிழக காவல்துறை அணிக்கு சிவகாசி மேயர் சங்கீதா பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி