சிவகாசி: வைகோவின் அரசியல் கொள்கை தோல்வி தான் அர்ஜுன் சம்பத்..

71பார்த்தது
கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகிறது, என்று சிவகாசியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி. |விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்திப்பின்போது.
கடந்தாண்டு ஏற்பட்ட அதே துயரம் இந்த ஆண்டும் சந்தித்து வருகிறோம். இது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி. தற்போது முதல்வர் ஸ்டாலினும் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு வருகிறார். இப்போது அவரது மகனும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
வைகோவின் அரசியல் கொள்கை தோல்வியை காட்டுகிறது. விஜய் அரசியல் வரும் 27 ஆம் தேதி நடிகர் விஜயின் மாநாடு நடைபெறுகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறோம். விஜய் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக அமையட்டும்.
தீபாவளியை மையமாக வைத்து சரவெடிக்கு மீதான தடையை நீக்க வேண்டும். சாம்சங் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு இருதலை நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் பேட்டியின் போது கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி