சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடரும் திருட்டு சம்பவத்தால் நோயாளிகள் அதிர்ச்சி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவிற்குள் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் இரண்டு செல்போன்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் நடைபெறும் மூன்றாவது திருட்டு சம்பவம் இதுவாகும். முன்னதாக ஒரு முறை கணினி சாதனங்களும், மற்றொரு முறை 10க்கும் மேற்பட்ட பேட்டரி திருடு போன நிலையில் தொடர்ந்து திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.