54 மாணவர்களை கடித்த மலைத் தேனீக்கள்!

81பார்த்தது
54 மாணவர்களை கடித்த மலைத் தேனீக்கள்!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் மலைத்தேனீக்கள் கூடுகட்டியிருந்துள்ளன. இந்நிலையில் அந்த மலைத்தேனீக்கள் விரட்டி விரட்டி கடித்ததில் 54 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு தலை சுற்றல், மயக்கம், வாந்தி, முகம் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி