பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம்: அமைச்சர் மரியாதை

59பார்த்தது
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம்: அமைச்சர் மரியாதை
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம் கோவை பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று (அக்., 07) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன், திட்டத்தின் முன்னோடிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த திட்டம் உருவான நாளான அக்., 7ஆம் தேதியை தமிழக அரசு பாசன திட்ட தினமாக அறிவித்திருந்தது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் எம்எல்ஏ வி.கே. பழனிச்சாமி கவுண்டர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி