சிவகாசி: மேம்பால பணியை நேரில் ஆய்வு செய்த நிதி அமைச்சர்...

58பார்த்தது
சிவகாசியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணியை நேரில் ஆய்வு செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்டம், சிவகாசிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் சாலையிலுள்ள காட்சியார்புரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பால பணியை நேரில் பார்வையிட்ட நிதி, சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்டம் ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விரைவில் மேம்பால பணியை முடிக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைவில் சுற்று சாலை அமைக்கப்படும் என்றார். மேலும் இந்நிகழ்வின் போது சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், மாநகராட்சி மேயர் சங்கீதா, வட்டாசியர் லட்சம், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மாநகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி