சிவகாசி: 3 திருநங்கைகள் கைது...

52பார்த்தது
சிவகாசி அருகே சிறுவனிடம் மிரட்டி பணம் பறித்த மூன்று திருநங்கைகள் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று இரவு 11 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 திருநங்கைகள் சிறுவனை வலுக்கட்டாயமாக இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் தவறாக நடந்துள்ளனர். மேலும் அந்த சிறுவனிடமிருந்து செல்போனை வாங்கி அதிலிருந்த ஜிபே மூலம் ரூ. 18 ஆயிரம் எடுத்துக் கொண்டு விரட்டி விட்டுள்ளனர். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாசியை சேர்ந்த கார்த்தி ( எ ) கனிஷ்கா ( 23), நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த ராஜா ( எ ) லக்கி ( 22 ), சேலம் மேட்டூரை சேர்ந்த கோகுல் பிரசாத் (எ ) பிளாக்கி (25), ஆகிய 3 திருநங்கைகளை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி