சிவகாசி: லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் நாடார் நந்தவன தெருவில் வைத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா மற்றும் பிற மாநில சீட்டுகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

மேற்படி தகவல் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்பாண்டியராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் ஆலாவூரணி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா, மற்றும் பல மாநில லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை கைப்பற்றிய போலீஸார் இருவர் மீது திருத்தங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி