விமான சாகச நிகழ்ச்சி குறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.