கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது...

68பார்த்தது
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது. 130 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு மாணவர் விடுதி முன்பாக கஞ்சா விற்பனை செய்யபடுவதாக திருத்தங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன்தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில் திருத்தங்கல் கிழக்கு ரத வீதியை சேர்ந்த
பார்தீபன் மற்றும் இவரது மனைவி லட்சுமி மற்றும்
ஆலாவூரணி பகுதியை ரவி ஆகிய மூன்று பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது சோதனையில்
130 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றி மூன்று பேர் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி