சாத்தூர் - Sattur

சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற இருக்கன்குடி வழிபாடு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று (செப்.,20) வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் அதிமுகவினர் சிறப்பு பூஜை ஈடுபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அதிமுகவினர் கழகம் மீண்டும் ஆட்சி அமைய வேண்டி இருக்கன்குடி மாரியம்மனிடம் மனமுருக பிரார்த்தனை ஈடுபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற வரதராஜன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கனி, அருப்புக்கோட்டை நகரக் கழக செயலாளர் சக்திவேல் பாண்டியன், விருதுநகர் நகரக் கழக துணை செயலாளர் பா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோஸ்