30 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் பெய்த பேய் மழை

76பார்த்தது
மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிகப்பெரிய கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் வந்துள்ளதால் பொது மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், மதுரையில் இன்று 15 நிமிடத்தில் (பகல் 3 மணி முதல் 3.25 வரை) 4.5 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. மேலும் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை, 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழைப் பொழிந்துள்ளதை சுட்டிக்காட்டி போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி