வாறுகால் பணி விரைவில் முடியும் உதவி கோட்டப் பொறியாளர் தகவல்

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர் செல்லும் வாறுகால் பணி முப்பது நாட்களில் முடிக்கப்படும்
சாத்தூர் மெயின் சாலை மற்றும் வெம்பக்கோட்டை சாலையில் நகராட்சி பகுதியில் சாலையின் இரு பகுதியிலும்
மழை நீர் செல்வதற்காக வாறுகால் அமைக்க ரூ. 14 கோடியில் மதிப்பிடு தயார் செய்யபட்டு கடந்த இரண்டு மாதங்களாக
வாறுகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வாறுகால் செல்லும் பாதையில்
இருக்கும் மரங்கள் , மின் கம்பங்களை அகற்று வதற்காக சம்பந்தபட்ட துறையினர்
அனுமதிக்கா சில இடங்களில் பணிகள் நடை பெறாமல் அரை குறையாக இருந்தது. தற்போது மரங்களை அகற்ற பசுமை தீர்ப்பாயம், மின்கம்பங்களை அகற்றி கொள்ள மின்சார வாரியத்தினர்
அனுமதி கொடுத்துள்ளதால் அவற்றை அகற்றி மாற்று இடத்தில் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் 30 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என்று சாத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி