மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

60பார்த்தது
விருதுநகர் லட்சுமி நகர்
திரு. வி‌. க. தெருவைச் சேர்ந்தவர் வீரமணி இவரது மனைவி கனக லதா
இவரது மகள் ஆதி ஸ்ரீ விவோகா.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த செமஸ்டர் தேர்வில் பிஸியாலஜி பாடப்பிரிவில்
தேர்ச்சி அடையவில்லை எனவும் அதைத்தொடர்ந்து
அந்தத் தேர்வை கடந்த ஆகஸ்ட் 1 இல் மீண்டும் எழுதியுள்ளார்
நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் அதே பாடப்பிரிவில் தோல்வியடைந்துள்ளார்.
இதன் காரணமாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
வீட்டில் இருந்த தனது தாயார் கனக லதாவிடம் குளிக்கச் செல்வதாக கூறி விட்டு கதவை உட்புறமாக பூட்டிவிட்டு அறையில் இருந்த பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த தாயார் கனக லதா தந்தை வீரமணியிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த வீரமணி மட்டும் அக்கம் பக்கத்தோர் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது ஆதி ஸ்ரீ விவோகா தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி