சாத்தூர்: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை...

79பார்த்தது
சத்துார் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் டென்னிசன்(34). இவரது மனைவி மலர். மது பழக்கத்திற்கு அடிமையான டென்னிசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி மது போதையில் தகராறில் ஈடுபட்ட டென்னிசன் இடம் போலீஸில் புகார் அளிக்கப்போவதாக மலர் கூறி உள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு அன்று இரவு டென்னிசன் வீட்டில் இருந்த மலரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து டென்னிசனை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதில் டென்னிசனுக்கு 10 ஆண்டுகள் செய்தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி