இராஜபாளையம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது...

70பார்த்தது
இராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே பூபால்பட்டி தெருவில் உள்ள பெட்டிக்கடை லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. தகவலின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திலுள்ள பெட்டிக்கடையை ஆய்வு செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ 5000/-, ஒரு செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி