இராஜபாளையம்: ஆதாய கொலை வழக்கில் குற்றவாளி கைது

72பார்த்தது
இராஜபாளையம் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணின் கழுத்திலிருந்த நகையை பறிக்க முயன்ற கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செட்டியார்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த மரக்கண்ணு என்பவரது மனைவி மல்லிகா. வீட்டில் இவர் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டினுள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, கழுத்திலிருந்த தங்க செயினை பறிக்க முயன்ற போது மல்லிகா சத்தம் போட அவரை கீழே தள்ளி விட்டு மர்ம நபர் தப்பி சென்று விட்டனர்.

மேலும் மல்லிகா கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனை அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். மேலும் மர்ம நபர் மிரட்டியது தொடர்பாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் கணவர் மரக்கண்ணு புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரோடு மற்றும் கடை பகுதிகளிலில் வைக்கப்பட்ட CCTVயை ஆய்வு செய்தனர். அதில் தளவாய்புரம் அருகே புத்துார் பிள்ளையார் கோவிலை சேர்ந்த கணேசன் மகன் சமூத்திரக்கனி என தெரிய வந்தன. அவரை பிடித்து விசாரணை செய்ததில் கத்தி முனையில் நகையை பறிக்க முயன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர் மீது ஆதாய கொலை வழக்கு நிலுவையில் உள்ளன.

தொடர்புடைய செய்தி