குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

77பார்த்தது
குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!
மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான். இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா இன்று (அக்.3) கொடியேற்றுத்துடன் தொடங்கியுள்ளது. பக்தர்கள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்கினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து நேர்த்தி கடன் செலுத்த உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது.

தொடர்புடைய செய்தி