லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

73பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் முகவூர் முத்துச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையான போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் பன்னீர்செல்வம் என்பவர் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தன.

மேலும் அவரிடமிருந்து நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டு மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி