பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள்

78பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் நேற்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தனது சொந்த செலவில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி