பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார்

1086பார்த்தது
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார்
பாராளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் நவீன பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதிக்காக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி