வசமாக சிக்கிய லேப்டாப் திருடி

559பார்த்தது
வசமாக சிக்கிய லேப்டாப் திருடி
நொய்டாவைச் சேர்ந்த 26 வயதான பி.டெக் பட்டதாரி பெண்ணை பெங்களூர் HAL காவல்துறை கைது செய்துள்ளது. தனியார் வங்கியில் சிறிது காலம் பணிபுரிந்துவந்த இவர், தனியார் விடுதிகளில் தங்கியிருந்து வந்துள்ளார். பின்னர் வங்கி வேலையை விட்ட இவர், விடுதியில் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் சாப்பிட செல்லும்போதோ, டீ பிரேக் செல்லும்போது அவர்களது அறைக்குள் நைசாக நுழைந்து விலையுயர்ந்த லேப்டாப், செல்போன் ஆகிய பொருட்களை திருடி சென்றுவிடுவாராம். பின்னர் அதனை தனது சொந்த ஊரில் கள்ள சந்தையில் விற்றுவிட்டு மீண்டும் பெங்களூரு வந்து வேறு தங்கு விடுதியில் அறை எடுத்து அதே வேலையை செய்து வந்துள்ளார். இதனையடுத்து விடுதி வாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி