சென்னை, துரைப்பாக்கம் காந்தி தெருவில் உள்ள சாலையோரத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (57) கூலி வேலை செய்து கொண்டு இரவில் சாலையோரத்தில் உறங்குவது வழக்கம். நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று சாலை சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் ஏறி உள்ளது. அந்த இடத்தில் சிவகுமார் உறங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் லாரி ஓட்டுனர் அவர் மீது ஏற்றி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.