மரக்காணம் அருகே வல்லத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.

570பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிநகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வல்லத்தம்மன் கோயில். இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி முதல் கால யாக பூஜைகளுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு யாகங்கள் பூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை நான்காம் கால யாக பூஜைகளுடன் பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலசங்கள் புறப்பாடும் விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செட்டிநகர் புதுவை அனுமந்தை மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி