தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையின்போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கும் பணம் கொடுத்தார் என்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என கோவை மாநகர ஆட்சியர் கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்த வீடியோ ராமநாதபுரம் மாவட்டத்தில் 29.07.2023 அன்று என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. பொதுவாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பது நமது கலாச்சாரம். ஆனால் இதனை நாங்கள் தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. தற்போது பொய்யை பரப்பும் கட்சிகள் இவ்வாறு பணம் கொடுக்கும்போது விழிப்புடன் இருங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் .