அரசூர் வி. ஆர். எஸ். , பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராமநாதன் வாழ்த்திப் பேசினார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் இந்தியா எண்டர்பிரைசஸ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லிமிடெட் துணை பொது மேலாளர் சக்திவேல் 580 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், 'இலட்சியம் இல்லாத வாழ்வில் சாதனை செய்வது அரிது. இலக்குடன் கூடிய இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தால் சாதனை செய்வது எளிது.
ஒருவர் வாழ்வில் முன்னேற்றமடைய போதிய அறிவு திறனுடன் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும்' என்றார்.
விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.