ஏடிஎம்மில் திருட முயற்சி! ரூ.8.12 லட்சம் கருகி நாசம்

63பார்த்தது
ஏடிஎம்மில் திருட முயற்சி! ரூ.8.12 லட்சம் கருகி நாசம்
தெலங்கானாவில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் உள்ளிருந்த 8.12 லட்சம் பணம் தீயில் கருகி நாசமானது. சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் விசாரித்த போது மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்று முடியாமல் போனது தெரிந்தது. இயந்திரத்தை உடைத்தபோது மின்கசிவால் தீ விபத்து நடந்துள்ளது. கொள்ளையடிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி