தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலம் 90 சதவீதத்திற்கு மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், ஒரு தவணைக்கு பின் மற்றொரு தவணையை முறையாக செலுத்தாத நிலை நீடிக்கிறது. மேலும் பல காரணங்களால், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளதால் இதை தவிர்க்க, தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.