நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்களை கைது செய்ய கோரிக்கை

1102பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த எடையன்சாவடி கிராமத்தில் ஆரோவில் பவுண்டேசன் சார்பில் ஆதரவற்ற நாய்களை வளர்ப்பதற்கு அங்கு கூடாரம் அமைத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் 300 க்கும் மேற்பட்ட நாய்களை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நான்காம் தேதி அன்று மர்மமான முறையில் இரண்டு நாய்கள் இறந்து கிடந்தது கண்டு அங்கு வேலை செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மர்மமான முறையில் இறந்து கிடந்த நாய்களை யார் கொன்றது எப்படி அது இறந்தது என ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி